<div id="Middlecolumn_internal"> <h3>ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் சீரமைப்பு</h3> <h4>துவக்கம்</h4> <p style="text-align: justify; ">•2001 -ஆம் ஆண்டில் பெண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்த இத்திட்டம் துவக்கப்பட்டது.</p> <h4>நோக்கம்</h4> <p style="text-align: justify; ">•பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் கிராமப்புற பெண்களின் தனித்துவம், பாதுகாப்பை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.</p> <h4>திட்ட செயலாக்கம்</h4> <p style="text-align: justify; "><strong>சுகாதார வளாகங்கள் அமைத்தல்</strong></p> <p style="text-align: justify; ">•2001-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் 12,618 கிராம ஊராட்சிகளில் சுமார் 750 சதுர அடி பரப்பளவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன.</p> <p style="text-align: justify; ">•ஒவ்வொரு வளாகத்திலும், 14 கழிவறைகள், 2 குளியலறைகள், மின்மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கத் தேவையான கல் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் விநியோகத்தினை வளாகத்தில் உறுதி செய்யப்பட்டது.</p> <p style="text-align: justify; ">•மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 2011-12 ஆம் ஆண்டில், பயனற்றுப்போய் மற்றும் பழுதடைந்த நிலையிலிருந்த 12,796 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்களை ரூ.170 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•தண்ணீர் விநியோகம் மற்றும் விளக்குகளுக்குத் தேவையான மின் வசதி கிராம ஊராட்சிகளின் மூலம் பராமரிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify; ">•மகளிர் வசதிக்காக வளாகங்களில் எரியூட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.</p> <p style="text-align: justify; ">•வளாகத்தின் உபயோகிப்பாளர்கள் கண்டறியப்பட்டு பயன்படுத்துவோர் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; "><strong>பயன்படுத்துவோர் குழுக்கள் அமைத்தல்</strong></p> <p style="text-align: justify; ">•புனரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களை முறையாக பயன்படுத்தவும், பராமரிக்கவும் ஒவ்வொரு வளாகத்திற்கும் பயன்படுத்துவோர் குழு ஒன்றினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை முறையாக பயன்படுத்தவும், பராமரிக்கவும், பயன்படுத்துவோர் குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•பயன்பாடு மற்றும் பராமரிப்பிற்கான வழிகாட்டி புத்தகம் தயாரிக்கப்பட்டு அனைத்து பயன்படுத்துவோர் குழுக்களுக்கும் கையேடாக வழங்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; "><strong>கண்காணிப்புக் குழுக்கள் அமைத்தல்</strong></p> <p style="text-align: justify; ">•மகளிர் சுகாதார வளாகத்தின் பராமரிப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில், கண்காணிப்புக் குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•குழுக் கூட்டத்தில் விவாதிக்க (வேண்டியவை) ப்படுபவை</p> <p style="text-align: justify; ">ஒவ்வொரு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் பயன்பாட்டு நிலை</p> <p style="text-align: justify; ">மகளிர் சுகாதார வளாகத்தினை பயன்படுத்துவோர் குழுக்கள் பராமரிக்கும் முறை</p> <p style="text-align: justify; ">வளாகங்களை கிராம ஊராட்சி கால முறையில் பராமரிக்கும் விதம்</p> <p style="text-align: justify; "><strong>பயன்படுத்துவோர் குழுக்களின் கருத்துக்கள்/ஆலோசனைகள்</strong></p> <p style="text-align: justify; ">கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அல்லது மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் / ஆலோசனைகள்</p> <p style="text-align: justify; ">திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்</p> <p style="text-align: justify; ">மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.</p> <p style="text-align: justify; ">மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை</p> <p style="text-align: justify; ">வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)</p> <p style="text-align: justify; ">கிராம அளவில் : ஊராட்சி மன்றத் தலைவர்</p> <h3 style="text-align: justify; ">ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள்</h3> <h4 style="float: left; text-align: justify; "><span>துவக்கம்</span></h4> <p style="text-align: justify; ">•2012-13ம் ஆண்டில் ஆண்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தரும் பொருட்டு இத்திட்டம் துவக்கப்பட்டது.</p> <h4 style="text-align: justify; ">நோக்கம்</h4> <p style="text-align: justify; ">•பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கிராமப்புற பெண்களுக்கு உறுதி செய்து தரபட்டது போன்று ஆண்களுக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தருவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.</p> <h4 style="text-align: justify; ">திட்ட செயலாக்கம்</h4> <p style="text-align: justify; ">சுகாதார வளாகங்கள் அமைத்தல்</p> <p style="text-align: justify; ">•2012-13ம் ஆண்டில் முதல் கட்டமாக ஒரு வட்டாரத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் வீதம் தமிழகத்திலுள்ள 385 வட்டாரங்களில் தலா ரூபாய் 4,00,000/- மதிப்பீட்டில் 570 சதுர அடி பரப்பளவில் 770 ஒருங்கிணைந்த ஆண்கள் சுகாதார வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•ஒவ்வொரு வளாகமும் 8 கழிப்பறைகளை உள்ளடக்கியதாக இருக்கும். தண்ணீர் வசதியுடன் கூடிய குளிக்கும் இடம், துணி துவைக்கும் கல் ஆகியவையும் இருக்கும்.</p> <p style="text-align: justify; ">•இதன் தொடர் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு வளாகத்திலும் தனியாக தண்ணீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•தண்ணீர் விநியோகம் மற்றும் விளக்குகளுக்கு தேவையான மின் வசதி கிராம ஊராட்சிகளின் மூலம் பராமரிக்கப்படுகிறது.</p> <p style="text-align: justify; ">பயன்படுத்துவோர் குழுக்கள் அமைத்தல்</p> <p style="text-align: justify; ">•வளாகத்தின் உபயோகிப்பாளர்கள் கண்டறியப்பட்டு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது</p> <p style="text-align: justify; ">•இதற்கென அமைக்கப்பட்ட பயன்படுத்துவோர் குழுக்கள், வளாக கட்டுமானப் பணியின் துவக்கத்திலிருந்தே ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் பராமரிக்கப்படுவதுபோல, இந்த வளாகங்களின் தினசரி பராமரிப்பினை பயன்படுத்துவோர் குழுக்களே எடுத்துச் செய்வதுடன், இதன் தொடர்பராமரிப்பு சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியால் மேற்கொள்ளப்படும்.</p> <p style="text-align: justify; ">• இந்த வளாகங்களின் பராமரிப்பு பணியில் பயன்படுத்துவோர் குழுக்களுடன், கூட்டாண்மை அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் பங்கேற்க ஊக்கப்படுத்தப்படும்.</p> <p style="text-align: justify; "><strong>கண்காணிப்பு குழுக்கள் அமைத்தல்</strong></p> <p style="text-align: justify; ">•ஆண்கள் சுகாதார வளாகத்தின் பராமரிப்பை கண்காணிக்க மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில், கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரால் அமைக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: justify; ">•குழுக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை</p> <p style="text-align: justify; ">சுகாதார வளாகத்தினை பயன்படுத்துவோர் குழுக்கள் பராமரிக்கும் முறை</p> <p style="text-align: justify; ">சுகாதார வளாகங்களை கிராம ஊராட்சி கால முறையில் பராமரிக்கும் விதம்</p> <p style="text-align: justify; "><strong>பயன்படுத்துவோர் குழுக்களின் கருத்துக்கள் / ஆலோசனைகள்</strong></p> <p style="text-align: justify; ">கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அல்லது மண்டல அலுவலர்கள் ஆய்வின் போது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் / ஆலோசனைகள்.</p> <p style="text-align: justify; ">திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்</p> <p style="text-align: justify; ">மாநில அளவில் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.</p> <p style="text-align: justify; ">மாவட்ட அளவில் : மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை</p> <p style="text-align: justify; ">வட்டார அளவில் : வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி)</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்</p> </div>