<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு, அனைத்து மாவட்டங்களிலும் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகள் வழங்கல் திட்டம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது.</p> <h3 style="text-align: justify;">பயன்பெற தகுதிகள்</h3> <ul> <li style="text-align: justify;">பயனாளி பெண் அங்கத்தினராக இருத்தல் வேண்டும்.</li> <li style="text-align: justify;">அக்குடும்பத்தில் உள்ள நபர் எவரும் எரிவாயு இணைப்பு பெற்றிருக்கக் கூடாது.</li> <li style="text-align: justify;">குடும்ப அட்டையில் பயனாளியின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">பயனாளி நிரந்தரமாக அதே இருப்பிடத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.</li> <li style="text-align: justify;">பயனாளியின் வீட்டு சமையல் அறையில் மேடை இருத்தல் வேண்டும். அல்லது மேடை அமைக்க முன் வர வேண்டும்.</li> <li style="text-align: justify;">பயனாளி எரிவாயுவினை குறைந்த பட்சம் 3 வருடங்கள் சமையல் செய்ய பயன்படுத்த வேண்டும்.</li> <li style="text-align: justify;">எரிவாயு சிலிண்டர் மட்டும் பயனாளியால் வாங்கப்பட வேண்டும்.</li> </ul> <h3 style="text-align: justify;">விண்ணப்பப் படிவம்</h3> <p style="text-align: justify;">இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று குடும்ப அட்டையின் நகலையும், தேவையான சான்றுகளையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு அரசு</p> </div>