<div id="MiddleColumn_internal"> <p style="text-align: justify;">மனித வாழ்விற்கு வீடு மிகவும் இன்றியமையாததாகும். வசிப்பதற்கு இடமில்லாத துன்ப நிலையை நீக்கி பாதுகாப்பான மனநிலையும், ஒரு அடையாளத்தையும் அது மக்களுக்குத் தருகிறது. வீடில்லா நிலையை நீக்குவதை, இந்திய நாட்டின் வறுமையை ஒழிக்கும் ஒரு முக்கிய திட்டமாகக் கருதலாம்.</p> <h3 style="text-align: justify;">இந்திரா ஆவாஸ் யோஜனா</h3> <ul style="text-align: justify;"> <li>2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.</li> <li>4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.</li> <li>கிராம மக்களுக்கான வீடுகள் எனும் திட்டம் கிராம வளர்ச்சி அமைச்சகத்தால் இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் நடத்தப்பட்டது.</li> <li>மத்திய அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட இத்திட்டத்தின் செலவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன.</li> <li>பின்வரும் நிலைகளிலிருப்பின் நிதியுதவி அளிக்கப்படுகிறது.</li> <li>மாநிலம் / யூனியன் பிரதேசம் <ul> <li>அதிக அளவு வீடில்லா மக்கள் இருக்கும் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.</li> <li>75% வீடில்லா நிலைக்கும் 25% மாநில அளவிலான திட்டக்குழு பரிந்துரை செய்த வறுமை விகிதத்திற்கும் பயன்பாடு தரப்படுகிறது.</li> </ul> </li> <li>மாவட்ட அளவிலான ஒதுக்கீடு, <ul> <li>75 சதவிகிதம் வீடில்லா நிலைக்கும், மக்கள் தொகையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 25 சதவிகிதமும் அளிக்கப்படுகிறது.</li> </ul> </li> <li>சாதாரணமாக இருக்கும் பகுதியில் உள்ளோருக்கு ரூ. 45000 உதவித்தொகையாகவும், மலைப்பிரதேசங்களில் வசிப்போருக்கு ரூ. 48500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. DRDAs உதவித்தொகையை இரண்டு தவணைகளில் தருகிறது.</li> <li>வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிப்பவர்களின் முன்னேற்றத்தைக் குறியாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுகிறது.</li> <li>இத்திட்டத்தால் பயன்பெறுபவர்களில் 60 சதவிகிதத்தினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாதது.</li> <li>கழிப்பறை மற்றும் புகையில்லா சுல்கா (chulha) ஆகியனவற்றைக் கட்டும் செலவும் இவ்வுதவித் தொகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.</li> <li>இத்திட்டத்தின்படி வீட்டின் உரிமை முதலில் குடும்பத்தின் உறுப்பினருக்கே சேரும்.</li> </ul> <p style="text-align: justify;">மூளை மற்றும் உடல் திறன் குறைந்தோர், முன்னாள் இராணுவ வீரர்கள், விதவைகள் மற்றும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோர் போன்றவர்களுக்கும் இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p> </div>