<h3 style="text-align: justify;">பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்</h3> <p style="text-align: justify;">பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டம்.</p> <p style="text-align: justify;">இத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தி உள்ளது.</p> <p style="text-align: justify;">இத்திட்டப்படி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.</p> <p style="text-align: justify;">புதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படும்.</p> <p style="text-align: justify;">தமிழ்நாட்டில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 2 மருத்துவக் குழு வீதம் மொத்தம் 770 மருத்துவக் குழுக்கள் செயல்படும்.</p> <p style="text-align: justify;">ஆதாரம்: தமிழ்நாடு அரசு</p>