ஏப்ரல் 28 ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு முதல், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), பணியிடங்களில் விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதை வலியுறுத்துவதற்காக உலக தினத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுத்தல் ஏப்ரல் 28 அன்று ஆண்டுதோறும் உலக பணியிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார தினம் உலகளவில் தொழில் விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதை ஊக்குவிக்கிறது. இத்தினம், பாதுகாப்பு மற்றும் சுகாதார கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் உருவாக்குவதுன் மூலம் எவ்வாறு வேலை தொடர்பான இறப்புகள் மற்றும் காயங்களைக் குறைக்க உதவும் என்பது குறித்து சர்வதேச கவனத்தை ஈர்க்கும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாகும். வேலையில் ஏற்படும் இறப்புகள் மற்றும் காயங்களைத் தடுப்பதற்கு நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு. அரசாங்கங்கள், தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லத் தகுதியுடையவர்களாகவும், நிறுவனங்கள் செழித்து வளரவும் தேவையான உள்கட்டமைப்பை (சட்டங்கள் மற்றும் சேவைகள்) வழங்குவதற்கு பொறுப்பு; இதில் ஒரு தேசிய கொள்கை மற்றும் திட்டத்தை உருவாக்குதல் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டம் மற்றும் கொள்கைக்கு இணங்குவதைச் செயல்படுத்துவதற்கான ஆய்வு முறை ஆகியவை அடங்கும். பணிச்சூழல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்வது முதலாளிகளின் பொறுப்பு. தொழிலாளர்களின் பொறுப்பு, பாதுகாப்பாக வேலை செய்வதற்கும், பாதுகாத்துக் கொள்வதற்கும், மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதற்கும், உரிமைகளை அறிந்து கொள்வதுடன், தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பங்கேற்பதும் அகும். வேலையில் உருவாகும் அபாயங்கள் புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்சார் அபாயங்கள் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அல்லது சமூக அல்லது நிறுவன மாற்றங்களால் ஏற்படலாம், அவை: புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள், எ.கா. நானோ (Nano) தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் புதிய பணி நிலைமைகள், எ.கா. அதிக பணிச்சுமை, ஆட்குறைப்பால் வேலை தீவிரமடைதல், வேலைக்காக இடம்பெயர்வதால் ஏற்படும் மோசமான நிலைமைகள், முறைசாரா பொருளாதாரத்தில் வேலைகள். வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு வடிவங்கள், எ.கா. சுயதொழில், அவுட்சோர்சிங், தற்காலிக ஒப்பந்தங்கள் சிறந்த அறிவியல் புரிதல் மூலம் அவை பரவலாக அங்கீகரிக்கப்படலாம், எ.கா. தசைக்கூட்டு கோளாறுகளில் பணிச்சூழலியல் அபாயங்களின் விளைவுகள். சில ஆபத்து காரணிகளின் முக்கியத்துவம் குறித்த கருத்துக்களில் ஏற்படும் மாற்றங்களால் அவை பாதிக்கப்படலாம், எ.கா. வேலை தொடர்பான மன அழுத்தத்தில் உளவியல் காரணிகளின் விளைவுகள். 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்: பணியிடங்களில் AI மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பங்கு " என்பது 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ஆகும். AI (Artificial Intelligence) மற்றும் டிஜிட்டல் கருவிகள் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் (OSH) புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. இன்று, ரோபோக்கள் அபாயகரமான சூழல்களில் இயங்குகின்றன, கனரக தூக்குதல், நச்சுப் பொருட்களை நிர்வகித்தல் மற்றும் தீவிர வெப்பநிலையில் வேலை செய்கின்றன. அவை மீண்டும் மீண்டும் நிகழும் மற்றும் சலிப்பான பணிகளை மேற்கொள்கின்றன. டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சென்சார்கள் ஆபத்துகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகின்றன. அதே நேரத்தில், போதுமான தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நடவடிக்கைகள் இல்லாத நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் விபத்துக்கள், பணிச்சூழலியல் அபாயங்கள், பணி தீவிரமடைதல், குறைவுப்பட்ட பணி கட்டுப்பாடு போன்றவைக்கு வழிவகுக்கும். புதிய தொழில்நுட்பங்கள் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை மாற்றியமைக்கின்றன. இதில் பணிகளின் தானியங்கிமயமாக்கல், ஸ்மார்ட் கருவிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளின் பயன்பாடு, வர்ச்சுவல் ரியாலிட்டி (VR) மற்றும் பணியின் வழிமுறை மேலாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். வேலையின் டிஜிட்டல் மாற்றம், தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிலாளர் தளங்கள் போன்ற பணி ஏற்பாடுகளை மேம்படுத்த வழிவகுத்துள்ளது. இதை குறித்து மேலும் ஆராய வேண்டியது அவசியம். மூலம்: ஐ.நா. தொடர்புடைய வளங்கள் ILO அறிக்கை - ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துதல்: பணியில் AI மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பங்கு