ஆதார் அட்டையில் தனித்த எண் இருப்பதால், அதனை போலியாக உருவாக்குவது கடினம். அதற்கு காரணம் நம் பயோமெட்ரிக்ஸ் தகவல் உடன் அதாவது கை விரல் ரேகை, கண் கருவிழியின் ரேகை மற்றும் முகம் போன்ற பல தகவல்கள் இந்த அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆதார் என்பது உலகளாவிய எண்ணாகும். சென்ட்ரல் யூனிக் ஐடென்டிஃபிகேஷன் டேட்டாபேஸை தொடர்பு கொண்டு பயனீட்டாளரின் அடையாளத்தை நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏஜென்சிகளும் சேவை மையங்களும் உறுதி செய்து கொள்ளலாம்.
UID-யுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண் மூலமாக பாதுகாப்பான முறையில் குறைந்த செலவில், பயனீட்டாளரின் கணக்கில் பணத்தை பரிமாற்றம் முடியும்.
இந்த ஆதார் அட்டையின் மூலம் வங்கி பரிமாற்றத்தில் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றம் செய்துக்கொள்ள முடியும். இதனால் வங்கிச் சேவையில் தரம் மேம்படும். இந்த அட்டையின் எந்த ஒரு ஏஜென்சிகளுக்கும் பயனீட்டாளரின் அடையாளத்தை சரிப்பார்க்க முடியும், மேலும் இத்தகவல்கள் 100% உத்திரவாதத்துடன் கிடைக்கும்.
ஆதார் அட்டையை மத்திய அரசால் அங்கீகாரிக்கப்பட்ட ஒரு அடையாள ஆவணம், இந்த அட்டையின் மூலம் பயனாளிகள் தங்களின் உரிமைத் தகுதி, கோரிக்கை சேவைகள் மற்றும் தாங்கள் எழுப்பியுள்ள புகார்களை பற்றி இன்றைய தேதி வரையிலான தகவல்களை தங்களின் கைப்பேசி மூலமாக, kiosks மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு
கடைசியாக மாற்றப்பட்டது : 4/16/2024
ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் இலவசமாக மார்ச் ...
ஆதார் கார்டில் பிழைகள் இருந்தால் அதை திருத்துவதற்க...
பி.எம். கிசான் பயனாளிகள் 13 வது தவணை தொகையினை ப...
பொது நிதியியலில் மின்னணு முன்னேற்றங்கள் பற்றியும்...