அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இணைய சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள்.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டு விவரங்கள் பதிவு செய்யப்படாது எனவும், ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே பிளாஸ்டிக் அட்டை வழங்கப்படும்.
அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 333 பொது இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் பொதுமக்களுக்கு தேவையான வருவாய் துறையால் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று, குடும்பத்தில் முதல் பட்டதாரிசான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும், சமூகநல துறை சார்பில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கும் முதற்கட்டமாக சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவைகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றுகள் பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.50-ம், சமூக நலத்துறை சார்பிலான திட்டங்களில் பயன்பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.100-ம் என குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது.
பொது சேவை மையத்தில் சான்றுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தேவையான அனைத்து அசல் ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம். நாகை மாவட்டத்தில் செயல்படும் பொது சேவை மையங்களில் இதுவரை 32 ஆயிரத்து 955 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) தொடங்கப்படும் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து, ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
ஒப்புகை சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ஆதார் எண் கிடைக்க பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறவிரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்று கொள்ளலாம் இதற்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆதாரம் : தமிழ்நாடு கேபில் டீவி கார்ப்பரேசன் (இ- பொது சேவை மையம்)
கடைசியாக மாற்றப்பட்டது : 4/16/2024
தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் அம்மா அழைப்பு மையம்...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...