வருவாய் நிலை ஆணை எண் 24 ஏ
இத்திட்டத்தின்படி அரசு நிலங்கள் குறிப்பிட்ட கால வரையறைக்குட்பட்டு தனி நபர்கள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக அனுபவத்திற்கு குறிப்பிட்ட நோக்கங்களுக்கென வழங்கப்படுவது நிலக் குத்தகை எனப்படும்.
இவைகள் குறுகிய கால குத்தகை மற்றும் நீண்ட கால குத்தகை என இரு வகைப்படும்.
ஆண்டுக் குத்தகைத் தொகை நில மதிப்பின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஏரி, ஓடை, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலை புறம்போக்குகள் (அரசு ஆணை எண் 41, வருவாய்த் துறை, நாள்:20-1-1987)
மேய்க்கால் மற்றும் மந்தவெளி புறம்போக்கு நிலங்கள். (அரசு ஆணை எண் 959, வருவாய்த் துறை, நாள் :23-6-1987)
மயானம் (அரசு ஆணை எண் 116, வருவாய்த் துறை நாள்:20-1-1988)
நிலங்களை 3 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம். சிறப்பு நேர்வுகளில் நில நிர்வாக ஆணையர் (ம) அரசு ஆணையைப் பெற்று நீண்டகால குத்தகைக்கு விடலாம். (வருவாய் நிலை ஆணை எண் 24ஏ-2)
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் அப்போது நிலவும் சந்தை மதிப்பின் அடிப்படையில் குத்தகைத் தொகையை மாற்றி அமைக்க வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண் 24ஏ-2)
குத்தகைவிடும் அதிகாரமுள்ள அலுவலர் | நிதி அதிகாரம்(நிலத்தின்சந்தைமதிப்பு) |
வட்டாட்சியர் |
இல்லை |
வருவாய்க் கோட்ட அலுவலர் |
ரூ. 20,000 |
மாவட்ட ஆட்சியர் |
ரூ 50,000 |
நில் நிர்வாக ஆணையர் |
ரூ. 2,00,000 |
அரசாங்கம் |
ரூ. இரண்டு இலட்சத்திற்கு மேல் |
குத்தகை பெற்றவர் குத்தகைத் தொகையை நிர்ணயித்து ஆணையை வழங்கிய 60நாள்களுக்குள் செலுத்த வேண்டும். முடியவில்லையெனில் மேலும் 30 நாட்கள் நீட்டிப்பு செய்யலாம். மொத்தத்தில் 90 நாள்களுக்குள் குத்தகைத் தொகையை செலுத்தவில்லை எனில், குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
- குத்தகை நிர்ணயம் செய்ய சரியான சந்தை மதிப்பினை கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
- குத்தகைத் தொகையை தவறாமல் வசூல் செய்ய வேண்டும்.
- குத்தகை விட்ட நிலங்களை வேறு ஒருவருக்கு குத்தகைதார்ர் உள் குத்தகைக்கு(Sub Lease) விடுகிறாரா என்பதைக் கண்காணித்து, ஆமெனில், வட்டாட்சியருக்கு அறிவிக்க வேண்டும்.
- எந்த நோக்கத்திற்காக குத்தகை விடப்படுகிறதோ அந்த நோக்கத்திற்கு மட்டுமே நிலங்களை பயன்படுத்த வேண்டும். குத்தகை நிபந்தனைகள் மீறப்பட்டால் அதனை கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.
- நிலக்குத்தகை சம்மந்தமாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு பதிவேட்டினை பராமரிக்க வேண்டும்.
நில ஒப்படை மற்றும் வீட்டுமனை ஒப்படை
நில ஒப்படை
கிராமப்புற மக்கள் விவசாயத்தையும் அதனைச் சார்ந்த வேலையையும் நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் நிலம் இருப்பதில்லை. எனவே விவசாயத்திற்கு பயன்படக்கூடிய நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டம் விவசாய நில ஒப்படை வருவாய் நிர்வாக ஆணை 15-இன் கீழ் செயல்படுகிறது.
கீழ்க்காணும் முன்னுரிமைகள் வீட்டுமனை மற்றும் நில ஒப்படை செய்வதில் பின்பற்றப்படுகிறது.
எல்லை பாதுகாப்புப்படை வீர்ர் மற்றும் இராணுவப்படை உள்பட முப்படையில் பணியில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் அல்லது செயலிழந்தவர்களின் குடும்பங்கள்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்.
- விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள்.
- முன்னாள் இராணுவத்தினர்.
- நிலமற்ற ஏழைகள்.
ஒப்படை விதிகள்
- குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ.16,000/-க்கும் நகர்ப்புறத்தில் ரூ.24,000/-க்கும் குறைவானவர்களுக்கு இலவச நில ஒப்படை செய்யப்படுகிறது. (அரசு ஆணை(நிலை) எண்:287 – வருவாய்த்துறை –நாள் 31.5.2000)
- கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக இதர மாவட்டங்களில் ஒப்படை செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு அவர் ஏற்கனவே வைத்திருக்கும் நிலப்பரப்பும், ஒப்படை பரப்பும் சேர்த்து 3 ஏக்கர் புன்செய் அல்லது 1.5 ஏக்கர் நன்செய் என்ற வரம்புக்குட்பட்டு செய்யப்படுகிறது.
- கன்னியாகுமரி மாவட்ட்த்தில் மட்டும் புன்செய் 1 ஏக்கர் அல்லது நன்செய் 0.5 ஏக்கர் என்ற பரப்பளவு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நில ஒப்படை பெற்றவர் ஒப்படை பெற்ற நாளில் இருந்து மூன்று ஆண்டிற்குள் நிலத்தைச் சாகுபடி செய்ய வேண்டும்.
- நிலத்தை யாருக்கும் 10 ஆண்டுகளுக்குள் விற்கக் கூடாது. 10 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்ய வேண்டியிருப்பின் உரிய அலுவலர் அனுமதி பெற்ற பின்புதான் விற்பனை செய்யலாம். தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் நிலங்களை வேறு பிரிவினருக்கு விற்பனை செய்யக்கூடாது.
- நிலத்தில் குறைந்தது 10 மரங்கள் நட வேண்டும்.
- நிபந்தனைகள் மீறப்பட்டால் எவ்வித இழப்பீடும் இன்றி ஒப்படை செய்யப்பட்ட நிலத்தை அரசு மீட்டுக் கொள்ளும்.
- சமுதாய நிலங்கள் அதாவது ஏரி, குளம், வாய்க்கால், குட்டை போன்ற நீர்நிலை புறம்போக்குகள், மந்தைவெளி, மேய்க்கால் மற்றும் மயானம் ஆகிய நிலங்கள் ஒப்படை செய்ய தடை விதிக்கப்பட்டவையாகும்.
- சென்னை மற்றும் இதர நகர்ப்புறங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிட்ட தூர அளவிற்கு நில ஒப்படை செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மலைப் பிரதேசங்களிலுன் விவசாய நில ஒப்படை தடை செய்யப்பட்டுள்ளது.
- விவசாயத்திற்கும் நில ஒப்படை செய்வதற்கும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட நிதி அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அலுவலர் | நிதி வரம்பு |
வட்டாட்சியர் |
ரூ. 10,000 |
கோட்டாட்சியர் |
ரூ. 20,000 |
மாவட்ட வருவாய் அலுவலர் |
ரூ. 50,000 |
மாவட்ட ஆட்சித் தலைவர் |
ரூ. 2,00,000 |
நில நிர்வாக ஆணையர் |
ரூ. 2,50,000 |
அரசு |
ரூ. 2,50,000-க்கு மேல் |
எத்தகைய நிலங்களை ஒப்படை செய்யலாம்
- பொதுவாக தீர்வை ஏற்பட்ட தரிசு ஆட்சேபனையற்ற நிலங்களை மட்டும் நிலமற்ற ஏழைகளுக்கு ஒப்படை செய்யலாம்.
- தடை செய்யப்படாத புறம்போக்கு நிலங்களை ஒப்படை செய்யத் தகுதியிருப்பின் மாவட்ட ஆட்சியரி நில வகைபாடு மாற்ற உத்தரவுக்குப் பின்பு நிதி வரம்பின்படி ஒப்படை செய்யலாம்.
- தீர்வை ஏற்பட்ட தரிசு நிலங்கள் வசதியுள்ளவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தால் அதனை அகற்றி ஏழைகளுக்கு நிலமாற்றம் செய்யலாம்.வசதியுள்ளவர்களுக்கு ஒப்படை செய்யக்கூடாது.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களைப் பொறுத்தவரையில் அமைப்பின் தீர்மானம் பெற்ற பிறகே நிலங்களை ஒப்படை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்(தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994).
- கிராம நத்தம் புறம்போக்கு அருகில் உள்ள நிலங்களை நில ஒப்படை செய்யக் கூடாது(அரசு ஆணை 901-வருவாய்த்துறை நாள் 8-7-1986) மற்றும் அரசு ஆணை 959-வருவாய்த் துறை நாள் 20-1-1987.
- கனிம வளமுள்ள நிலங்களை ஒப்படை செய்யக் கூடாது.
- ஒதுக்கக் காடுகளின் எல்லையில் 200 மீட்டருக்குள் அமைந்துள்ள நிலங்களை ஒப்படை செய்யக் கூடாது.
- துறைமுகம் மற்றும் ரயில்வே நிலங்களுக்கு 805-மீட்டருக்குள் அமைந்திருக்கும் நிலங்களை அத்துறையினரின் இசைவினைப் பெற்ற பிறகே நில ஒப்படை செய்யலாம். (வருவாய் நிலை ஆணை எண் 15-38)
நில ஒப்படை செய்வதில் உள்ள நடைமுறைகள்
நில ஒப்படைச் செய்யக் கோரும் விண்ணப்பங்கள் விசாரணைக்கு வட்டாட்சியர் மூலம் வரப்பெற்ற உடன் அதன் கிராம நிர்வாக அலுவலர் நில ஒப்படைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
நில ஒப்படை செய்ய ஆட்சேபணை கோரும் விளம்பரம் A1 நோட்டீஸ் ஒன்றினை கிராமத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்.
புறம்போக்கு நிலங்களைப் பொறுத்த மட்டில் A1 நோட்டீசுடன் பொது விளம்பரமும் கிராமத்தில் செய்ய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் மேற்படி விளம்பரங்களை உண்மையாக விளம்பரம் செய்து ஆட்சேபனை ஏதாவது வருகிறதா என்று கண்காணிக்க வேண்டும். ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் விண்ணப்பதாரர் குறித்தான எல்லா விவரங்களையும் மற்ற நில மதிப்பு உள்பட சரியான முறையில் வாக்குமூல வடிவில் வருவாய் ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
வீட்டுமனை ஒப்படை:
சமுதாயத்தில் நலிந்த பிரிவினர்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவையான வசிப்பதற்கு இடம் வழங்குவது அரசின் நோக்கமாகும்.
அரசால் நில ஒப்படை செய்யத் தடை செய்யப்பட்ட இனங்களைத் தவிர்த்து ஒப்படை செய்ய எங்கெங்கு நிலம் உள்ளதோ அங்கு வீட்டுமனையைத் தகுதியுள்ளவர்களுக்கு நிலை ஆணை 21-இன் கீழ் வரையறுக்குட்பட்டு வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் நிலமற்ற ஏழைக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.16,000க்கு குறைவாக உள்ளவர்களுக்கும், நகர்புறங்களை பொறுத்த வரையில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்கும் குறைவாக உள்ளவர்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள பெண் உறுப்பினர்கள் பெயர்களில் மட்டுமே வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் 3 செண்ட், நகராட்சி எல்லைக்குள் 11/2 செண்ட், மாநகராட்சி எல்லைக்குள் 1 செண்ட் என்ற அளவில் வீட்டுமனைகள் ஒப்படை செய்யப்படுகின்றன.
நில ஒப்படை போல் வீட்டுமனை ஒப்படையிலும் முன்னுரிமை பின்பற்ற வேண்டும்.
வீட்டுமனை ஒப்படை செய்வதிலும் நில ஒப்படை போல் நிதி அதிகார வரம்பும் ஒரே மாதிரியானது.
நில ஒப்படை போல் வீட்டுமனை ஒப்படை செய்வதற்குத் தடை செய்யப்பட்ட நிலங்களை ஒப்படை செய்யக்கூடாது.
மாவட்ட தலைநகரங்கள், மற்ற நகர பஞ்சாயத்துகள் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள நிலங்களை வீட்டுமனைப் பட்டாவாக வழங்கச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை மீறாமல் வீட்டுமனை ஒப்படைச் செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
அரசு ஆணை எண் 534, வருவாய்த் துறை, நாள் 15-7-2005-இன் படி வீட்டுமனை ஒப்படை செய்வதற்கு ஒரு முறை சலுகையாக சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வீட்டுமனை ஒப்படை செய்ய வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரின் பணிகள்
- கிராம நத்தம் புறம்போக்கில் உள்ள காலி இடங்களை வீட்டுமனை ஒப்படை செய்யக்கோரி வரப்பெறும் மனுக்களை கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் வீட்டுமனை ஒப்படை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்த பின் கிராமத்தில் அறிவிப்பு ஒன்றினை விளம்பரம் செய்து ஆட்சேபணைகள் உண்டா என்பதனை தீர விசாரிக்க வேண்டும்.
- வீட்டுமனை ஒப்படைச் செய்யும் அதே நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் கருத்தினைப் பெற்று ஆட்சேபனை இல்லாத நிலையில் தகுதியின் அடிப்படையில் வீட்டுமனை ஒப்படை செய்ய வருவாய் ஆய்வாளர் மூல்ம் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்யலாம்.
- வீட்டுமனை பெற தகுதியான நபர்களை மட்டும் கிராம நிர்வாக அலுவலர் அடையாளம் கண்டு உண்மையான தகுதியுள்ள நபருக்கு வழங்க பரிந்துறை செய்ய வேண்டும்.
- வருவாய்த்துறை அலுவலர்களின் தணிக்கைக்குப் பின்பு ஒப்படை ஆணையை உரிய அலுவலர்கள் நிதி வரம்பிற்கு உட்பட்டு வழங்குவார்கள்.
- ஒப்படை செய்யபட்ட ஆணை பெற்ற பின்பு கிராம நிர்வாக அலுவலர் வீட்டுமனை அடங்கல், சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் வீட்டுமனை, பதிவேடு ஆகிய கணக்குகளில் பதிவுகள் மேற்கொள்ளுவது உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
- வீட்டுமனை ஒப்படைப் பெற்றவர் கூட்டுறவு சங்கங்கள் தவிர இதர நிறுவனங்களில் வீட்டுமனை பட்டாவை அடமானம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் அரசாணை எண் 532-வருவாய்த் துறை. நாள் 29-11-2001-இன் படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வீட்டுமனைப் பட்டாவை அடமானம் வைத்து கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து விதி மீறல் இருந்தால் அறிக்கை அனுப்ப வேண்டும். வீட்டுமனை ஒப்படை பெற்ற பிறகு 12 மாதத்திற்குள் வீடு கட்ட வேண்டும். இதனை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
- ஒப்படை செய்யப்பட்ட மனையை யாருக்கும் விற்கக் கூடாது, நிபந்தனைகள் மீறப்பட்ட இடங்களை கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
- ஆதி திராவிடர் நலத்துறையில் வீட்டுமனைப் பட்டா வழங்கிய ஆறு மாதக் காலத்திற்குள் வீடு கட்ட வேண்டும்.(வருவாய் நிலை ஆணை எண் 22)
ஆதாரம் : தமிழ்நாடு பொது சேவை ஆணைக்குழு