ஒரு வீட்டுமனையை வாங்குவதற்கு முன்னர் அந்த நிலத்தின் உரிமையாளர் யார், அவர் அந்த உரிமையை யாரிடமிருந்து பெற்றார், அந்தச் சொத்து வேறு யாரிடமாவது அடமானத்தில் உள்ளதா, வேறு யாருக்கும் விற்கப்பட்டு உள்ளதா என்ற விவரங்களை வில்லங்கச் சான்றுகள் மூலமாக சரிபார்ப்பது வழக்கம். பொதுவாக பதினைந்து ஆண்டுகளில் இருந்து முப்பது ஆண்டுகள் வரையிலும் வில்லங்கச் சான்று சரிபார்க்கப்படுகிறது.
வீட்டுமனை வாங்குவதோடு வில்லங்க சான்றின் பணி முடிவடைந்து விடுவதில்லை. கிரயப் பத்திரத்தை பதிவு செய்தபிறகு, சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒருதடவை வில்லங்கச் சான்று பெறுவது நல்லது. உங்களுக்கு கிரயம் செய்யப்பட்ட நிலம் உங்களை அடுத்து வேறு யாருக்காவது விற்பனை செய்யப்பட்டுள்ளதா அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ள இது உதவும்.
வீட்டுக்கடன் வழங்குகிற சில வங்கிகள் இப்படி இடத்தை வாங்கிய பிறகும் வில்லங்கச்சான்று பெறுவதை கட்டாயமாக்கி உள்ளன. கடன் வாங்கா விட்டாலும் வில்லங்கச்சான்று பெற்று வீட்டுமனையின் உரிமையை சரி பார்த்துக் கொள்வது பாதுகாப்பானது.
ஆதாரம் : தினத்தந்தி
கடைசியாக மாற்றப்பட்டது : 6/20/2020
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்க நிதியுத...
ஜன்தன் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித...
அந்நிய நாட்டவர் மற்றும் அந்நிய சுற்றுலாப் பயணிகள் ...
அருணாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிடைக்கும் சேவைக...