மிகமுக்கிய மரபு வழியான மத்திய வங்கிப் பணிகள் சிலவற்றை செய்லாக்கும் பொறுப்பினை அரசு மற்றும் வங்கிகள் கணக்குத்துறை ஏற்றுள்ளது. அவையாவன – வங்கிகளுக்கும் அரசுகளுக்கும் வங்கியாளராக செயல்படுதல், மத்திய, மாநில அரசுகளின் பொதுக் கடன்களை நிர்வகித்தல் என்பன. ரிசர்வ் வங்கியின் உட் கணக்குகளை பராமரித்தல் வாராந்திர செயல்பாட்டு அறிக்கை, மற்றும் வருடாந்திர இருப்புநிலை ஏடு, ஆகியவற்றுக்கும் இத்துறையே பொறுப்பாகிறது.
மத்திய மாநில அரசுகளின் பொதுக்கடன்களை நிர்வகித்தல் உட்பட பொதுவான வங்கி வணிகம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ல் கூறப்பட்டவை மற்றும் குறிப்பிட்ட அரசுகளுடனான ஒப்பந்தங்கள் ஆகியவைகளால் முறைப்படி தரப்பட்ட உரிமைகளாகும். இந்தப்பணிகள் அன்றாட அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் பொதுக்கணக்குத் துறை, வைப்பு நிதி கணக்குத்துறை, பொதுக்கடன் அலுவலகம், மற்றும் முகமை வங்கி கிளைகள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் முதன்மை வைப்பு நிதி கணக்குகள் ரிசர்வ் வங்கியின் நாக்பூரிலுள்ள மத்திய கணக்குப் பிரிவில் பராமரிக்கப்படுகிறது. இப்பிரிவு மத்திய மாநில அரசுகளுக்கான வழிவகைச் செலவுக் கடன்களை, வழங்குதலையும் கவனித்துக் கொள்கிறது.
ரிசர்வ் வங்கியின் பல்வேறு துறைகளினால் அளிக்கப்படும் அதிருப்தியான சேவைகள் பற்றி, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் தீர்க்கப்படுவதையும் இத்துறை கண்காணிக்கிறது.
ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி
கடைசியாக மாற்றப்பட்டது : 11/16/2022