பிளாஸ்டிக் பொருட்களை மிகுதியாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனால், இந்திய அரசு பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ல், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை திருத்தியமைத்து, 50 மைக்ரான் தடிமனுக்குட்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகளை தேசிய அளவில் தடைசெய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் மட்டுமே பெருமளவு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
இதன் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இதனை கடுமையாக கையாளும் விதமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து, 01.01.2019 முதல் அமல்படுத்தப்படுத்தியுள்ளது.
பிளாஸ்டிக் என்பது பெட்ரோலியம் சார்ந்த பாலிமரால் செய்யப்பட்ட பொருள் ஆகும். இது ஹைட்ரோ கார்பன்களின் எண்முகச்சேர்ம சங்கலியாக அமைந்துள்ளது .
பிளாஸ்டிக் பொருட்கள் எந்த வகையான இரசாயண கலவைகளால் தயாரிக்கப்படுகிறது என்பதற்கிணங்க 7 வகையாக பிரிக்கப்படுகின்றது. PETE, HDPE, LDPE, PP, PS, PV மற்றும் பல.
பிளாஸ்டிக்கினை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அவை, தெர்மோ பிளாஸ்டிக் மற்றும் தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக். இதில் தெர்மோ பிளாஸ்டிக் மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம். தெர்மோ செட்டிங் பிளாஸ்டிக் மறுசுழற்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை அற்றதாகும். பிளாஸ்டிக் இயற்கையாக சிதைவடைவதற்கு 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும். எனவே பயன்படுத்திப்பட்ட பிளாஸ்ட்டிக் கழிவுகள் கரிவர கையாளப்படவில்லை எனில் அது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்குவிளைவிக்கும். ஒரு முறை பயன் படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தை, நீர் ஆதாரங்களை, வடிகால்களை அடைத்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் உட்புகாமல் மீள் நிரப்பு தடுக்கப்படுகிறது. மேலும் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறாமல் நிலத்தின் மேல் தங்கி, தேங்கி நிற்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களை திறந்தவெளியில் எரிக்கக்கூடாது. நகராட்சி திடக்கழிவுடன் பிளாஸ்டிக் சேர்த்து எரிக்கப்படும்போது, அதிலிருந்து டையாக்ஸின், பியூரான் போன்ற நச்சுவாயுக்கள் வெளியேற்றப்படுகிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியதாகும்.
பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைத்தல், திரும்பப்பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் மற்றும் மீட்பு செய்தல் பிளாஸ்டிக் மேலாண்மைக்கு ஆரோக்கியமான வழிகள் ஆகம்.
14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அவையாவன
மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் என்பது நுண்ணுயிரிகள் மூலம் சிதைக்கப்பட்டு கரியமிலவாயு, நீர், கனிம சேர்மங்கள் மற்றும் உரமாக மாறக்கூடியது ஆகும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் ஸ்டார்ச் அல்லது புரோட்டீன் ஆகியவை கலந்த கலவை பொருட்களால் தயாரிக்கப்படுகின்றது. இவை இந்திய தரநிர்ணயம் IS: 17088:2008-ன் படி தயாரிக்கப்பட வேண்டும். மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் சான்று பெறவேண்டும்.
சுற்றுச்சூழல் மற்றும் வன துறை அரசாணை எண் 84 நாள் 25.06.2018-ன்படி
பிளாஸ்டிக் தடை உத்தரவினை மீறுபவர்கள் மீது, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு